செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல்

29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் TVNMK 5476
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



29. திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் - TVNMK 5476
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
இராசிபுரம் ‍ஆத்துர் செல்லும் சாலையில் கோனேரிபட்டி ஏரிக்கரையில் சாலையோரம் (வலதுபுறம்) உள்ள நீர் விற்பனை செய்யும் நல்ல தண்ணீர் கிணற்றுக்கு தடுப்புச் சுவர் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் திறந்த வெளி கிணறினால் விபத்தில் சிக்கினால் உயர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தடுப்புச் சுவர் அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »
»மனு விவரம்
திறந்த வெளி கிணற்றுக்கு சுற்றுச் சுவர் கட்ட கோருதல் சார்பு


Publish on : 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோட்டப்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010


பார்வையில் காணும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலை கி.மீ 40/2-ல் கோனேரிப்பட்டி ஏரிக்கரை வலதுபுறம் உள்ள நீர் விற்பனை செய்யும் திறந்தவெளி கிணறு சாலையிலிருந்து 15.00 மீட்டர் தூரம் தள்ளி தனியார் பட்டா நிலத்தில் உள்ளது. அதிக தூரம் தள்ளி இருப்பதாலும் அவ்விடத்தில் சாலையின் அகலம் 12.00மீ ஆக உள்ளதாலும் இக்கிணற்றால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக