தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

17. நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் - TVNMK1492
அனுப்புநர்
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய உதவித் தொகையின்றி கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக உதவித் தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனு விவரம்

நான்கு ஆண்டுகளாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் நிலுவையில் உள்ள பலமனுக்கள்
Publish on: 25-02-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயலர், தொழிலாளர் நல வாரியம் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on: 22-03-2010

2006 முதல் 2010 நாளதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மற்றும் குறைபாடான தகுதியற்ற விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதையும் மேலும் மகப்பேறு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களில் சில பிற துறைகளில் இதே போன்ற நிதியுதவி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைக்குப்பின் அனுமதிக்கப்படும் என பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக