செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம் - TVNMK 1526
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



19. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம் - TVNMK 1526

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் . பார்வை:தினமலர் 25.02.2010
அய்யா,
நாமக்கல் மாவட்டத்தில் 15 யூனியன் உள்ளன.ஒவ்வொரு யூனியனிலும் தலா ஒரு வட்டார வளமையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் மூலம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை குறித்து பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 20 நாள் வீதம் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ஒவ்வொரு வட்டார வளமையத்தின் கட்டுப்பாட்டில் குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு குறுவள மையம் எனும் பள்ளித்தொகுப்பு கருத்தாய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் முதல், இரண்டாவது சனிக்கிழமையில் சம்மந்தப்பட்ட குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்விமுறை சம்மந்தமான பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அப்பயிற்சியை வட்டார வளமையத்தில் உள்ள ஆசிரியப் பயிற்றுனர்கள் அளிக்கின்றனர். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய் வீதம் பயணப்படி வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதான முறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே இப்பயிற்சியின் முழு நோக்கம். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட குறுவள மையங்களில் பயிற்சி சரிவர நடப்பதில்லை. பயிற்சியின் நோக்கம் முழுமையாக நிறைவேறாததுடன், அளிக்கப்படும் உதவித்தொகை மூலம் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் வீணடிக்கப்பட்டு வருகிறது மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கிறது. குறுவள மையங்களிலும் ஒவ்வொரு மாதம் முதல், இரண்டாவது சனிக்கிழமையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி சரிவர நடப்பதில்லை. காலை 9.30 மணிக்கு பயிற்சி ஆரம்பிக்க வேண்டும். பின், காலை 11.15க்கு சிறிய இடைவெளி. தொடர்ந்து மதியம் 1-2 மணி வரை உணவு இடைவேளை. மாலை 4.30 வரை இப்பயிற்சி நடக்க வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட நேரப்படி பெரும்பாலான குறுவள மையத்தில் பயிற்சி நடப்பதில்லை. கடனுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்பயிற்சி நடக்கும் நாட்களில் அதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் யாரேனும் ஒருவர் தனது திருமண நாள், பிறந்த நாள், பதவி உயர்வு போன்ற பெயரில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்த விருந்துக்காக ஆசிரியர்கள் குறு வளமைய பயிற்சிக்கு வருகின்றனர். மேற்குறிப்பிட்டபடி பயிற்சி நேரமும் சரிவர கடைபிடிப்பதில்லை. அதை குறுவளமைய ஒருங்கிணைப்பாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். அவர்களும் ஆசிரியர்கள் அளிக்கும் விருந்தில் பங்கேற்று அன்றைய சாப்பாட்டு செலவு மிச்சம் என்ற வகையில் கண்டும் காணாததுபோல் சென்று விடுகின்றனர். அதுபோல் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி இயக்குனரும் பயிற்சி சரிவர நடக்கிறதா என்பது பற்றி கண்டு கொள்வதில்லை.

Read Full Post மனு விவரம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு பயிற்சிகள் அரசு பணம் வீணாகும் அவலம்

: Publish on 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


: Publish on 02-03-2010

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குறுவள மையத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கல்வி முறை சம்மந்தமாக வழங்கப்படும் பயிற்சி அந்தந்த வட்டார வளமைய மேற்பாவையாளர் மூலம் முறையாக அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:38 am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக