செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்

30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



30. திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் - TVNMK 5320
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.


பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பட்டி வீட்டு வசதி குடியிருப்பு வளாகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் சாக்கடை கால்வாய் சரிவர சுத்தம் செய்யததால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவு சாலையில�


Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக ஆணையாளர் திருச்செங்கோடு நகராட்சி அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.

Publish on: 15-04-2010

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு க.எண். டி227ன் வீட்டிற்கு முன்பு உள்ள கழிவு நீர் செல்லும் சிறு பாலத்தின் அடியில் பிளாஸ்டிக் பொருட்கள் சென்றதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருவில் வழிந்தோடியது. 09.04.2010ம் தேதி துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு சாக்கடை அடைப்பு சரிசெய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்படி சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் 10.04.2010ம் தேதி கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு மீண்டும் சாக்கடை சுத்தம் செய்து பணிகள் முடிக்கப்பட்டது. .. நகராட்சி ஆணையர், திருச்செங்கோடு நகராட்சி.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக