தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

நாமக்கல் பேருந்து நிலையப்பகுதியில் கூட்டுறவு மருந்துக் கடைக்கு கடையோ, இடமோ ஒதுக்கித்தர- TVNMK 1339
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்_ 637408
9443275800
பெறுநர்:
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல்லில் நிறுவப்பட்டுள்ள கூட்டுறவு மருந்துக் கடையில் அனைத்து மருந்துகளும் 15 சதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த கடை நகரின் மையப் பகுதியில் இல்லாததால் பொதுமக்களால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளமுடியவில்லை. நாமக்கல் பேருந்து நிலையப்பகுதியில் கூட்டுறவு மருந்துக் கடைக்கு கடையோ, இடமோ ஒதுக்கித்தர மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
மனு விவரம்

Publish on: 22-02-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் மாவட்ட இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணைப்பதிவாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 26-02-2010
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மூலம் பொதுமக்களுக்கு தரமானதாகவும் விலை குறைவாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மருந்துகடை ஆரம்பிக்கப்பட்டது. பேரூந்து நிலைய பகுதியில் ஆறுமாத காலமாக கட்டிடமோ, இடமோ கிடைக்கவில்லை. இந்நிலையில் சங்கத்திலேயே திருச்செங்கோடு மெயின்ரோட்டில் ஆரம்பித்து அதிகபட்ச விலையில் 15 தள்ளுபடி செய்து விற்பனை செய்து வருகிறோம். விரைவில் பேரூந்து நிலைப்பகுதியில் மருந்துகடைக்கு கட்டிடம் கிடைக்கப் பெற்றதும் பேரூந்து நிலையப்பகுதியிலேயே செயல்படுத்துகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்பதை மனுதாரர்க்கு தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக