தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....
நாமக்கல் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால்...குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள் - TVNMK1329

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில செயலாளர்
தமிழக மாணவர் சங்கம் (பா.ம.க)
8.கச்சேரி தெரு
இராசிபுரம்_ 637408 .
9443275800
பெறுநர்:
திரு,மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நாமக்கல்
நாமக்கல் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. புதிய சாலை அமைக்கும் வரை பழுதடைந்த சாலைகளை செப்பனிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!
Read Full Post »
மனு விவரம்
குழிகள் சரிவர மூடப்படாத சாலைகள்

Publish on : 22-02-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 23-02-2010
நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இப்பணியில் 60 கிமீ. நீளமுள்ள சாலைகள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை திட்டப்பணி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சாலை மேம்பாட்டு நிதியில் இருந்து கோ ஆப்ரேட்டிவ் காலனி, 1 மற்றும் 2 வது தெருக்கள், கலைவாணி நகர், திருநகர் மெயின் ரோடு ரோட்டரி உறால் தெரு, திருநகர் குறுக்கு தெருக்கள், இந்திரா நகர் மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெருக்கள், பரணி நகர், டீச்சர்ஸ் காலனி ஆகிய இடங்களில் 8.30 கி.மீ நீளமுள்ள சாலைகள் செப்பனிடப்பட்டு தார் சலைகளாக மாற்றம் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 12 வது நிதிக்குழு 2008 2009 ம் ஆணடு நிதியில் ஏ.எஸ்.பேட்டை மெயின் ரோடு மற்றும் குறுக்கு தெரு சாலைகள் 1.20 கி.மீ நீளம் செப்பனிடப்பட்டு தார் சாலையாக அமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மொத்தம் 9.20 கி.மீ. நீளம் சாலை செப்பனிடப்பட்டுவிட்டது. மேலும் 12 வது நிதிக்குழு மானியம் 2009 2010 ஆண்டின் கீழ் ஆர்.பி.புதுர் மெயின் ரோடு பணி 0.500 கி.மீ நீளம் தேர்வு செய்யப்பட்டு பணி உத்திரவு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவுற்றதும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு என தோண்டப்பட்ட சாலைகளை மேடு பள்ளங்களை கிராவல் மண் கொண்டு மட்டப்படுத்தி சரி செய்யும் பணி மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியை விரைவில் முடித்து தருவதாக நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், நாமக்கல் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள். மேலும் நகரில் மீதம் உள்ள சாலைகளை செப்பனிட நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களுக்கு கருத்துரு ரூ.28.52 கோடிக்கு தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப்பெற்றவுடன் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக