தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

Posted on : 08-06-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பல மாதங்களாக பழுதடைந்துள்ள நிலையில், ஊராட்சி சார்பில் சீர்செய்யப்படவில்லை.இதனால் பெண்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை

________________________________________
Publish on : 09-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் இராசிபுரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 10-06-2010
கூனவேலம்பட்டிபுதூர் மகளிர் சுகாதார வளாகத்தில் ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் ஊராட்சி பொதுநிதியில் பழுது சரிசெய்யப்பட்டு சுகாதார வளாகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக