செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

குபபைகளை அகற்றக்கோருதல்

28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



28. சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல் - TVNMK 5482
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.

பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .

நாமக்கல் யூனியனுக்கு உப்பட்ட சின்னமுதலைப்பட்டி பஞ்சாயத்தில் 5 வார்டுகள் உள்ளன. அதில், 6,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இந்த பஞ்சாயத்தில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்க வசதியாக 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2வது மற்றும் 5வது வார்டு சந்திக்கும் இடத்தில் அறை கட்டப்பட்டது. ஆனால், பஞ்சாயத்தில் சேரும் குப்பைகளை கொண்டு வந்து அறைக்கு வெளியேதான் கொட்டிச்செல்கின்றனர். அதனால், சுற்றித்திரியும் தெருநாய்களின் புகலிடமாக மாறியுள்ளது. மேலும், குப்பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வீடுகளுக்கு செல்கிறது. மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றத்தால், வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Read Full Post »»மனு விவரம்
சின்னமுதலைப்பட்டியில் பஞ்சாயத்தில் குபபைகளை அகற்றக்கோருதல்


Publish on: 18-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார வளர்ச்சி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 23-04-2010

குப்பைகளை அகற்ற சின்னமுதலைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:53 am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக