தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

27. திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்பட TVNMK 5490
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டத்தில் திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
மனு விவரம்
பாட்டாளி மக்கள் கட்சி............ ........ திரையரங்குகளிலும், வணிக வளாகங்களிலும் தீ தடுப்பு வி�

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட வன அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாவட்ட வன அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on : 22-04-2010
நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் திரையரங்குகளை வருடந்தோறும் நாமக்கல் கோட்ட அலுவலர் தலைமையில் கூட்டாய்வு செய்யப்பட்டு வருகிறது. சில திரையரங்குகளில் மட்டும் தீயணைப்பு கருவிகள் மறு நிரப்பம் செய்யப்படாமல் உள்ள குறைகளை சுட்டிகாட்டி சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஆய்வின்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் வணிக வளாகங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:52 am
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக