தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

31. சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ - TVNMK 5321
அனுப்புநர்:
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
nalvinaiviswaraju@gmail.com.
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூலிக்கின்றனர். இதற்கு எந்தவித அரசாணையும் வெளியிடப்படவில்லை சிற்றுந்துகளின் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த மாவட்ட நிர்வாகமும்,மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
»மனு விவரம்
சிற்றுந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆக இருந்தது. தற்போது, ரூ. 2.50 காசுகளாக உயர்த்தி வசூ
Publish on: 13-04-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக வட்டார போக்குவரத்து அலுவலர், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்களின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 20-04-2010
சிற்றுந்துகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவேண்டும் என சிற்றுந்து உரிமையாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது களப்பணியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் சிற்றுந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி மேல்நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:55 am
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக