செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஆக்கிரமிப்பு தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை

20. ஆக்கிரமிப்பு-- தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை - TVNMK 1531
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



20. ஆக்கிரமிப்பு-- தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை - TVNMK 1531

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் நாமக்கல் புறநகர்த் திட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பொதுமக்களுக்கு கட்டித் தரப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டுவதற்கான திட்டப் பகுதியில் ஓடை புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு நிலம் 7.25 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்து வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. வருவாய்த் துறையிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாது ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டிய பிறகு 20 ஆண்டுகள் கழித்து நில மதிப்பை நிர்ணயம் செய்து தரும்படி வீட்டு வசதி வாரியம் கோருவதாக வருவாய்த் துறை கூறுகிறது. வீட்டு வசதி வாரியம் அனுமதி பெறாமல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடும்போதே வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது கடமை தவறிய செயலாகும். இதன் காரணமாக புறம்போக்கு நிலத்துக்கு தற்போதைய விலை மதிப்பை செலுத்த வேண்டிய நிலை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வருவாய்த் துறையும் புறம்போக்கு நிலத்துக்கு விலை நிர்ணயம் செய்வதில் காலதாமதம் செய்வதால் வீடு ஒதுக்கீடு பெற்ற நபர்கள் விற்பனை ஆவணம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read Full Post »
மனு விவரம்

ஆக்கிரமிப்பு தவறுக்கு காரணமாக இருந்த வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை

Publish on : 25-02-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 05-03-2 010

வண்டிப்பாதை மற்றும் ஓடை என வகைபாடு செய்யப்பட்டுள்ள நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேற்படி நிலங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு முன்நுழைவு செய்துக்கொள்ள வருவாய்த் துறையால் முன்நுழைவு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வீடுகள் கட்டும்பொழுதே வருவாய் துறையிடம் முறையாக முன்நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து வருவாய்த்துறை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தை வீடு கட்டாமல் தடுத்திருக்க வேண்டும் என கோருவது ஏற்க இயலாது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1989, 1991 -ம் ஆண்டுகளில் மேற்படி இனங்களில் முன்நுழைவு அனுமதி பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை. அதனால் மேற்படி ஆண்டுகளில் விலைமதிப்பை நிர்ணயம் செய்ய இயலாது. மேலும் மேற்படி ஆவணங்கள் ஏதும் இல்லாத சூழலில் தற்போதைய சந்தை மதிப்பை செலுத்தக் கோரியதில் தற்பொழுது அந்த மதிப்பை செலுத்த இயலாது என வீட்டுவசதி வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வீட்டுவசதி வாரியம் ஒத்துவராத நிலையில் வருவாய் துறையால் எவ்வித முடிவுக்கும் வர இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் வீட்டுவசதி வாரியம் 1989, 1991 ஆண்டுகளில் விலைமதிப்பை நிர்ணயம் செய்யக் கோருவதை ஏற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து சென்னை முதன்மை செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் அவர்களிடம் தெளிவுரை கேட்கப்பட்டுள்ளது. எனவே சென்னை முதன்மை செயலர் மற்றும் நில நிர்வாக ஆணையரிமிருந்து தெளிவுரை வரப்பெற்ற பின்னரே மேற்படி 7.20 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து முடிவெடுக்க இயலும்.
இடுகையிட்டது nalvinai நேரம் 11:39 am

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக