தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

21.. நீதிமன்ற பணிகளை விரைந்து முடிக்க கோரல் - TVNMK5585
நாமக்கல்,திருச்சி சாலையில் மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றமும், மோக னூர் சாலையில் உரிமையியல் நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஒரே இடத் தில் அமையும் வகையில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 12 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு நீதிமன்ற வளாக கட்டுமான பணிகள் கடந்தாண்டு தொடங்கின. இப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நீதிமன்ற கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது, மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைவில் முடிக்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Read Full Post »
மனு விவரம்

Publish on : 07-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. செயற்பொறியாளரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 18-05-2010
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதி அரசர்களின் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு, பூச்சுவேலை முடிவடைந்துள்ளது. மேலும் தண்ணீர் விநியோக அமைப்பு மற்றும் சுகாதார அமைப்பு அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. மேலும் மேற்படி பணி முடிக்க ஒப்பந்த காலம் அக்டோபர் 2010 முடிய உள்ளதால், ஒப்பந்த கால கெடுவுக்குள் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணி முழுமையாக முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பணிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அரசிடமிருந்து பெறப்படவேண்டும் என்பதையும், இதற்கு கருத்துருக்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக