செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம்

திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் - TVNMK 160 6
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



15. திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் - TVNMK 160 6

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோட்டில் இருந்து சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட சங்ககிரி, இடைப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து நேரடியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்செங்கோடு- சங்ககிரிக்கு அரசு டவுன் பஸ்களில் 4 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சங்ககிரி சாலையில் பாலம் வேலை நடக்கிறது. அதன்காரணமாக அவ்வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையில் பஸ்கள் செல்வதை காரணம்காட்டி திருச்செங்கோடு - சங்ககிரி செல்லும் அனைத்து அரசு டவுன் பஸ் ளிலும் 50 பைசா முதல் ஒரு ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்

திருச்செங்கோடு - சங்ககிரி அரசு டவுன் பஸ்களில் கூடுதல் கட்டணம்

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று பதில் வி்ரைவில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


Publish on: 19-03-2010

சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் திருச்செங்கோடு பிரிவிலிருந்து சங்ககிரி ஆர்.எஸ்.பள்ளிகூடம் வரை உள்ள சிறு பாலங்கள் திரும்ப கட்டும் பணி 25.01.2010 முதல் நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்துகள் நாகிசெட்டிப்பட்டி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு சுமார் 2.8 கி.மீ கூடுதலாகிறது. எனவே திருச்செங்கோடு-சங்ககிரி நகரப்பேருந்துகளுக்கு ரூ.4.00 பயணக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.தற்சமயம் ரூ.4.50 பயணக்கட்டமாக தூரத்திற்கேற்ப வசூலிக்கப்பட்டு வருகிறது சிறு பாலங்கள் கட்டுமான பணி நி்றைவு பெற்றவுடன் பழைய வழித்தடத்தில் பேருந்தினை இயக்கப்படும்பொழுது பழைய பயணக்கட்டணம் வசூல் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக