தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

7. நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகளை மாற்ற வேண்டி - TVNMK 1763
நாமக்கல் நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகள் உள்ளன. அவை காற்று மழை காரணமாக மக்கள் மீது விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளன அவற்றை மாற்றி புதிய சிணெட் அட்டை அல்லது கான்கிரீட் மேல்தளம் அமைக்கலாம். மேலும் மோகனூர் சாலையில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகில் சினிமா போஸ்ட்டர்களை ஒட்டுவதை தடுக்க வேண்டும் அப்பகுதியிலுள்ள நடை பாதைக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மனு விவரம்

நாமக்கல் பேருந்து நிலையத்தில் நிழற்கூடங்களில் உடைந்த சிமெண்ட் அட்டைகளை மாற்ற வேண்டி
Publish on: 01-03-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

Publish on: 01-03-2010
நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கை மற்றும் நிழற்கூடங்களில் உடைந்து சிமெண்ட் அட்டைகளை மாற்ற ரூ.1,30,000/க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு மன்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேற்படி பணிகளை மேற்கொள்ள 18.3.2010 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டவுடன் பணிகள் விரைந்து மடீக்கப்ப்டும் என்பதையும், மோகனுர்ர் சாலை அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி எதிரில் உள்ள சினிமா போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகிறது. மீளவும் அதே இடத்தில் போஸ்டர்கள் ஒட்டாதவாறு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது எனவும், அப்பகுதியில் உள்ள நடைபாதைக் கடைகள் அவ்வப்போது அகற்றப்பட்டு வருவதோடு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக