செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய

25 பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் புத்தகங்கள் விநியோகம் செய்ய
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



Posted on : 31-05-2010
அனுப்புநர் : நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர், மாநில மாணவர் சங்க செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி, 8, கச்சேரி தெரு, இராசிபுரம் – 637408, செல்:9443275800. மின் அஞ்சல்: nalvinaiviswaraju@gmail.com வலைபூ: http://thoduvanam-nalvinai.blogspot.com/
பெறுநர் : மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
புகார் விவரம் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான சமச்சீர் பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. ஒரு மாதத்துக்கு முன், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பாடப் புத்தகங்கள் , தபால்துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பாடபுத்தகங்கள் சென்னை அரசு பாடநூல் நிறுவனத்தில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரஙகில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 1ம் வகுப்புக்கு 21 ஆயிரம் புத்தகமும், 6ம் வகுப்புக்கு 66 ஆயிரம் புத்தகங்களும் வந்துள்ளன. பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு இந்த புத்தகங்கள் விநியோகம் செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
தொடர்புடைய துறை : பொதுவானவை


________________________________________
Publish on : 31-05-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

________________________________________
Publish on : 03-06-2010
அனைத்து பள்ளிகளுக்கும் 01.06.2010 அன்று சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


________________________________________
Publish on : 03-06-2010
தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாமக்கல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அறிக்கையை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக