தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....

10. ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் கூடுதலாக கட்டணம் - TVNMK 1748
அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
ராசிபுரம்- சேலம் சாலையில் ஆஞ்சநேயர் கோவில் முன்பும், எஸ்.ஆர்.வி., பெண்கள் பள்ளி அருகிலும் நெடுஞ்சாலை துறை மூலம் பாலம் வேலை நடந்து வருகிறது. அதனால், ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் ஆண்டகலூர்கேட் வழியாக செல்லும் நிலை உள்ளது. அதை காரணம் காட்டி ராசிபுரத்திலிருந்து சேலத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 8.50 ரூபாயைக் காட்டிலும் 1.50 கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீஸல் செலவைக் காரணம் காட்டி 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Read Full Post »மனு விவரம்
ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் பஸ்கள் கூடுதலாக கட்டணம்
Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக மேலாளர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சேலம் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலாளரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்
Publish on: 12-03-2010

Publish on: 19-03-2010
இராசிபுரம் - சேலம் சாலையில் பாலம் வேலை நடைபெற்றதால் பேருந்துகள் ஆண்டகளுர் கேட் வழியாக சென்றன. கூடுதல் கி.மீ இயக்கப்பட்டதால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்சமயம் பாலம் வேலை முடிந்து பழைய வழித்தடத்திலேயே செல்வதால் முன்பு வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக