செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த

பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த - TVNMK 1753
தமிழகத்தில் அனைத்திலும் முதல் மாவட்டமாக எங்கள் நாமக்கல் மாவட்டம் திகழ வேண்டும் என்ற உயரிய என்னத்துடன் அரசின் திட்டமாக இல்லாமல் மக்களுக்கான திட்டமாக அமைந்த‌ நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இணைய வலைப்பூ http://www.namakkalcollector..net/. மூலமாக மக்கள் குறைகேட்கும் வாய்பினை பயன்படுத்தி நாம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகளும் பெற்ற பதில்களும் உங்களுக்காக.....



9. பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த - TVNMK 1753

அனுப்புநர்: .
நல்வினை .விஸ்வராஜு.எம்.ஏ.,பி.எல்.,
மாநில மாணவர் சங்க செயலாளர்
பாட்டாளி மக்கள் கட்சி
8, கச்சேரி தெரு
இராசிபுரம் - 637408
செல்:9443275800
பெறுநர்:
மாவட்ட ஆட்சியர்,
நாமக்கல் .
நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ளன. அதன் பஸ், வேன்களில் மாணவ, மாணவியரை ஏற்றிச்செல்லும் போது டிரைவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், முறையான லைசென்ஸ் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விபத்துக்களை தவிர்க்க ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு உதவியாளர் கட்டாயம் அமர்த்த வேண்டும். வாகன மாடல்கள் 10 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி வாகனங்களில் கட்டாயம் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்திருக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மனு விவரம்

பள்ளி, கல்லூரி வாகனத்தில் கட்டாயம் உத்தரவுகள் அமல்படுத்த

Publish on: 01-03-2010

தங்களது மனு தக்க நடவடிக்கைக்காக நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கும், திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் அறிக்கை பெற்று விரைவில் பதில் தெரிவிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் நாமக்கல்


: Publish on 08-03-2010

புகார் மனுவில் தெரிவிக்கப்பட்ட பொருள் தொடர்பாக இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவினை பின்பற்றுமாறு தக்க அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையர், சென்னை -5 அவர்களின் உத்தரவின்படி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இவ்வலுவலக களப்பணியாளர்களால் நாளது தேதி வரை 1854 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக 333 தணிக்கை அறிக்கைகள் வழங்கி மேல் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக